Friday, March 23, 2012

பென்ட்லி(Bentley) - சுய புராணம்

வணக்கம் நண்பர்களே...




என்னதான் வேலைப்பளு அதிகரித்தாலும் அதிலும் சில அனுபவங்கள் சுவாரசியம் மிகுந்தவைகளாக மாறிப்போகின்றன..அதில் ஒரு விஷயம் இந்த பதிவு...


பென்ட்லி கார் பற்றி அறிந்து கொள்ள - Bentley car 


இந்தியாவில் பார்க்க முடியாத கார் வகைகளை இங்கு ஹனோயில் பார்த்து வருகிறேன்...அதில் ஒன்று தான் இந்த கார்(!)...என்னதான் வியாக்கியானம் பேசினாலும் ஆசை யாரை விட்டது..


திடுதிப்பென்று ஒரு பெரிய மனிதரின்(!) அழைப்பை மறுக்க முடியாமல் வேலை விஷயமாக சந்திக்க வேண்டி வந்தது...அவரும் என்னுடைய மேலதிகாரி தங்கி இருக்கும் மேல் தட்டு ஹோட்டலுக்கு கார் அனுப்புவதாக கூறி போன் செய்தார்...


நானும் டொயோட்டா வரும் என்ற எதிர் பார்ப்பில் இருந்தேன்..அழைப்பு வந்தது கைப்பேசியில்...எடுத்து பேசினால் வெளியில் காத்திருப்பதாக அவரின் காரியதரிசி(ஹிஹி!) கூறினாள்...அடங்கொய்யால நானும் தலைவரும்(!) வெளியில் வந்து பார்க்கிறோம் படகு போல இருக்கிறது அந்த கார்..உள்ளே உட்கார்ந்த பொழுது தான் பல விஷயங்கள் புரிந்தன...


கார் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கினாலும் குலுங்க வில்லை..ஒரு வேலை அந்த காரிய(!) தரிசி பேச்சு கொடுத்து வந்ததாலா(!)..இந்தப்பயணம் மறக்க முடியாத விஷயம்...என்னமா பணக்காரங்க வாழுராங்கய்யா...


சும்மா சொல்லக்கூடாது...வாழ்கைய அனுபவிக்கிராங்கய்யா(!)...இந்த பந்தாவான காரை வைத்து இருக்கும் அந்த நபரை சந்தித்த போது அவரின் பேச்சில் ஒரு துளி பெருமை தெரியவில்லை..அவ்வளவு சாதாரணமாக இருக்கிறார்..


இப்படிப்பட்ட பயணங்கள் தான் மேல்மட்ட மக்களின் அன்றாட வாழ்கையை என்னை போன்ற சாதாரண மனிதனுக்கு உணர்த்துகின்றன..




என்ன வாழ்கடா இது...இல்ல என்ன மாதிரியான வாழ்கைடா இது...ம்ம் காலம் ஒரு நாள் மாறும் நம் கனவுகள் எல்லாம் தீரும்(!)..வந்ததை எண்ணி வியக்கின்றேன்..சிலர் சிரிப்பார்...சிலர் அழுவார்...நான்...???????


கொசுறு: பகிரணும்னு தோணிச்சி...தவறு இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்!

15 comments:

NAAI-NAKKS said...

Car ulle ulla...
Vasathi....pathium....
Sollurathu...

(bus-la thookkam varala
maamas...yaaraavathu...
Irunthaa kuummalaam...)

Robin said...

//என்னமா பணக்காரங்க வாழுராங்கய்யா...
//

இக்கரைக்கு அக்கறை பச்சை!

சி.பி.செந்தில்குமார் said...

எனக்கு ஒரு ஃபிரண்ட் இருக்கான்.. அவனுக்கு குழந்தை மனசு... டீச்சர் என் கையை பிடிச்சு இழுத்துட்டான் அப்டினு புகார் பண்ணூவான்.. அவங்க ஊர்ல மின் தடை பிரச்சனை இல்லை.. இருந்தாலும் மின் தடை உள்ள நண்பனின் வருகையை ரெகுலரா எதிர் பார்ப்பான்.. நாம வந்தாத்தான் அவனும் வருவான்

அப்படியாவது பிசியா இருக்கானா?ன்னு பார்த்தா வெட்டி அரட்டை தான் அடிப்பான்.. பி ஏ கூட..

ஆனாலும் அவன் நல்லவன்

ஹி ஹி

ரமேஷ் வெங்கடபதி said...

தமிழ்பதிவுலகிலேயே முதன்முறையாக.... பென்ட்லி கார் சவாரி செய்த பெருமை அடைந்த மாம்ஸ்க்கு பாராட்டுக்கள்!

வீடு K.S.சுரேஸ்குமார் said...

மாமா நான் ஆடி கார்ல ஒரு முறை போயிருக்கிறேன்.(ஓட்டியதில்லை)அதுவே மிட்டாய் கடைய பார்த்த பட்டிக்காட்டான் மாதிரி உணர்வு இருந்தது...பென்ட்லி கார்ல நீங்க போனது அது மாதிரிதான் நினைக்கிறேன்.ஆனா நான் போன போது பக்கத்துல B.A.பிகரு இல்லை அதான் வருத்தம்..

FOOD NELLAI said...

//சி.பி.செந்தில்குமார் says
எனக்கு ஒரு ஃபிரண்ட் இருக்கான்.. அவனுக்கு குழந்தை மனசு... டீச்சர் என் கையை பிடிச்சு இழுத்துட்டான் அப்டினு புகார் பண்ணூவான்.. அவங்க ஊர்ல மின் தடை பிரச்சனை இல்லை.. இருந்தாலும் மின் தடை உள்ள நண்பனின் வருகையை ரெகுலரா எதிர் பார்ப்பான்.. நாம வந்தாத்தான் அவனும் வருவான்

அப்படியாவது பிசியா இருக்கானா?ன்னு பார்த்தா வெட்டி அரட்டை தான் அடிப்பான்.. பி ஏ கூட..

ஆனாலும் அவன் நல்லவன்

ஹி //
பதிவைப் படிச்சு கமெண்ட் போட்டுறவே கூடாதுன்னு கொள்ளைப்பேரு கிளம்பிருக்காங்கப்பா!

FOOD NELLAI said...

//இந்தப்பயணம் மறக்க முடியாத விஷயம்...//
எப்படி!

சென்னை பித்தன் said...

கொடுத்து வைக்கவேண்டும்!

உலக சினிமா ரசிகன் said...

பத்து மணி நேர பவர்கட்டுல அவனவன்
கொட்டை பொசுங்கித்திரியிரோம்...மாப்ள...
உனக்கு பெண்ட்லி கார் சவாரியா...
நல்லா இருடே...நல்லா இரு...

கார்த்தி கேயனி said...

I know about this car now only . Any way thank you

NAAI-NAKKS said...

Food sir...
U...r...correct....
I...
Vazhi.....
Mozhinjing.....
:)
:)
:)

ஹாலிவுட்ரசிகன் said...

பென்ட்லி கார் சவாரியா? நமக்கு Prius தான் இதுவரை உச்சபட்ச சவாரி.

ரெவெரி said...

அந்த பெரிய மனிதர்ட்ட நம்ம பேரையும் சொல்லி வைங்க தலைவா...

MANO நாஞ்சில் மனோ said...

கொய்யால வாழுரானுகாய்யா வாழட்டும் வாழட்டும்....

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் says: March 23, 2012 9:59 AM Reply
எனக்கு ஒரு ஃபிரண்ட் இருக்கான்.. அவனுக்கு குழந்தை மனசு... டீச்சர் என் கையை பிடிச்சு இழுத்துட்டான் அப்டினு புகார் பண்ணூவான்.. அவங்க ஊர்ல மின் தடை பிரச்சனை இல்லை.. இருந்தாலும் மின் தடை உள்ள நண்பனின் வருகையை ரெகுலரா எதிர் பார்ப்பான்.. நாம வந்தாத்தான் அவனும் வருவான்

அப்படியாவது பிசியா இருக்கானா?ன்னு பார்த்தா வெட்டி அரட்டை தான் அடிப்பான்.. பி ஏ கூட..

ஆனாலும் அவன் நல்லவன்

ஹி ஹி//

ஹா ஹா ஹா ஹா உண்மையை உண்மையா சொன்ன உன் டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு அண்ணே....