Thursday, March 15, 2012

இந்தியனாகிய நான் தலைகுனிகிறேன்!

வணக்கம் நண்பர்களே..


விரிவாக இங்கு  


இன்று காணொளி மூலம் கண்ட சானல் 4 காட்சிகள் மனம் பதைக்க வைத்தன...


என்னுள் தோன்றும் கேள்விகள்..


இதுக்கு நீங்க எங்கள நெஞ்சுக்கு நேரா சுட்டு கொன்னு இருக்கலாமேய்யா...முதுகுக்கு பின்னாடி சுட்டு இருக்கீங்களே...


என்னை ஆள்பவள் யார்...இந்தியத்தாயா இத்தாலியத்தாயா...!


எத்தனையோ இடர் வந்த போதும் அதை துடைக்க போராடும் படை வீரர்கள் மதம், மொழி, மாநிலம் பார்ப்பதில்லை...ஆனால் இவை அனைத்தையும் தமிழன் என்பதால் எம் மேல் பார்த்த நிர்வாகமே நீவீர் நித்திரை துறப்பீராக..உம்மை இந்த கொலை பாதகசெயல் நடைபிணம் ஆக்கக்கடவது...


சிறு பாலகன் எதிர்காலத்தில் எதிரியாகிவிடப்போகிறான் என்று எண்ணி கொன்ற சமூகமே...எதிர்காலம் உன்னை சித்ரவதை செய்யும் காலம் வெகு தூரத்தில் இல்லை...


இந்தியனாக இருப்பதில் இந்த கொலைகளை எண்ணி தலை குனிகிறேன்...


எம்மால் ஏதும் செய்ய முடியாது போகினும்...காலம் ஒரு நாள் தக்க தண்டனை கொடுக்கும்..


வெறி பிடித்த கொடுங்கோலர்களே...நீவிர் அழியும் காலம் விரைவில் வந்தே தீரும்..


இது இந்திய மண்ணை தெய்வமாக நினைப்பவனின் சாபம்...


என் தேசமே இந்த செயலுக்காக பாவ மன்னிப்பு எங்கு போய் கேற்க போகிறாய்...


போதுமா அழித்த என் மக்கள்..இன்னும் உன் நர மாமிச வெறி அடங்க வில்லையா...


தூ..


இப்படிக்கு...ஒன்றும் செய்ய முடியாத மர....தமிழன்!


17 comments:

மோகன் குமார் said...

கொடுமை. நம்மால் முழுவதும் பார்க்க முடிய வில்லை. அங்கே இருப்பவர்கள் எப்படி துடித்திருப்பார்கள் !

ரெவெரி said...

இந்தியனாகிய நான் தலைகுனிகிறேன்//

கூடவே நானும்...

NAAI-NAKKS said...

நிலை இல்லாத உலகில்...

வேறு சொல்ல வார்த்தை வரவில்லை...

சம்பத்குமார் said...

///வெறி பிடித்த கொடுங்கோலர்களே...நீவிர் அழியும் காலம் விரைவில் வந்தே தீரும்..

இது இந்திய மண்ணை தெய்வமாக நினைப்பவனின் சாபம்...///

அந்த கொடுகோலர்களின் வாழ்க்கை முடியும் நேரம் வந்துவிட்டது மாம்ஸ்

இந்த போரில் சிந்திய ஒவ்வொரு கண்ணீர் துளிக்கும் காரணவாதிகள் பதில் சொல்ல வேண்டும் மாம்ஸ்

வீடு K.S.சுரேஸ்குமார் said...

ரத்தவெறி பிடித்த ஈழ இராணுவம்
கோரத்தாண்டவம் ஆடிய பொழுதில்
அமைதி முகமூடியனிந்து காங்கிரஸ்க்கு
சாமரம் வீசிய கனிமொழி!
இன்று இந்தியாவில்தான்
தமிழகம் இருக்கிறதாக
நம்புகிறாராம்.....
நாங்கள் நம்பிக்கையிழந்து
பல வருடம் ஆனதம்மா....
தமிழர்களை ஒரு நாயாய்
கூட மதிக்காமல் சுட்டுக்கொல்ல
ஆயுதம் தந்துதவிய கன்னடன்
எஸ் எம் கிருஸ்ணா எங்கள் வரிப்பணமும்
அதில் கலந்திருக்கிறது நினைத்து
இருப்பாயா? முதல்வர் அனுப்பிய
கடித்ததை பிரியங்கா குழந்தையின்
கக்கா துடைக்கப்பட்டதோ?
யார் அறிவார்...!
மௌனகுரு
உளரி பதில் கடிதம் படித்து
அர்த்தம் யார் சொல்வார்
அமரிக்கனுக்கு இருக்கும்
சூடு சுரனை பஞ்சாப்
சப்பாத்திக்கு இல்லையோ...!
மிஸஸ் மௌனகுரு கொஞ்சம்
உப்பு கொஞ்சம் அதிகமாக போடுங்கள்
சுரனைக்காக அல்ல
கடலில் சிங்களவனால் சுடப்பட்ட
தமிழக மீனவனின் ரத்தம் அதில்
இருக்கும்....

கோகுல் said...

வெறி பிடித்த கொடுங்கோலர்களே...நீவிர் அழியும் காலம் விரைவில் வந்தே தீரும்..//
கண்டிப்பா வரும்

FOOD NELLAI said...

உணர்வுகளின் உச்சம். உதடுகள் உச்சரிக்க வார்த்தையில்லை.

Yoga.S.FR said...

என்ன செய்ய வெங்கட்?கேட்டால்,பிராந்திய நலன்,சீன அச்சுறுத்தல் என்பார்கள்!இத்தாலியாளை தூக்கிக் கொண்டாடும் முதுகெலும்பற்ற எங்கள் தலைவர்களைச் சொல்லவேண்டும்!

உலக சினிமா ரசிகன் said...

பதிலுக்கு பதில்...
ரத்தத்துக்கு ரத்தம்...
வரலாறு வழங்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

பயங்கர கொடுமை சார்... பார்க்கவே கஷ்டமா இருக்கு... காலம் ஒரு நாள் பதில் சொல்லும்...

வைகை said...

போய்யா... நாமளும் கடந்த எட்டு வருசமாத்தான் வெட்கப்பட்டுக்கிட்டு இருக்கோம்... அங்க எம்பிக்கள் பேசும்போது நம்ம பிரதமர் உக்காந்துருந்தத பாரத்தீல? மூஞ்சில காறி துப்பனும்போல இருந்தது...

சங்கவி said...

நம் தலைஎழுத்து....

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இவனுன்ன்க எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டங்க பாஸ் .. அடுத்த தேர்தல் வரட்டும் .. டவுசர் கிழிய விடுவோம்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

பேய்கள் ஆட்சி செய்யும் நாட்டில் பாசத்துக்கும் , நேசத்துக்கும் மதிப்பு இல்லை

"என் ராஜபாட்டை"- ராஜா said...

/போதுமா அழித்த என் மக்கள்..இன்னும் உன் நர மாமிச வெறி அடங்க வில்லையா...


தூ..
//

தூ..தூ..தூ..தூ..தூ..தூ..தூ..தூ..தூ..தூ..தூ..தூ..தூ..தூ..தூ..தூ..தூ..தூ..தூ..தூ..தூ..தூ..தூ..தூ..தூ..தூ..தூ..தூ..தூ..

காட்டான் said...

:-(

மாலதி said...

இந்தியனாகிய நான் தலைகுனிகிறேன்// தூ..தூ..தூ..தூ..தூ.......தூ