Thursday, May 10, 2012

ஓட்டு போடு - ஜலபுல ஜன்ஸ்!

வணக்கம் நண்பர்களே...




இப்போ லேட்டஸ்ட்டா பல குத்து வெட்டுகள் நடந்துகிட்டு இருக்கு...அதைப்பற்றிய என் எண்ணவோட்டமே இந்த பதிவு!...பொறுத்துக்கொள்ள முடிந்தால் தொடரவும்...அல்லவேல் தவிர்க்கவும்!


அண்ணே Less டென்சன் More ஒர்க்...


இப்படி நான் சொல்லீங்கோ ஊரே சொல்லுது...சரி இது கிடக்கட்டும் கழுதை...நமக்கு கருத்து(!)தானே முக்கியம்!..தொடருவோம்!


டேய் ஓட்டு போட்டியா...


ஏன்னே போட்டன்னே....


அப்புறம் எப்படிடா எதிர் ஓட்டா விழுது...


அது எனக்கு எப்படின்னே தெரியும்...


அதாண்டா...எந்த நாதாறிப்பசங்களோ திருட்டு(!) ஐடிக்கள வச்சி போடுதுங்கப்பா...


அப்படியான்னே...இதுனால என்ன நடக்கும்!


யோவ் நான் எவ்ளோ கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன்..அதெல்லாம் வீணா பூடிச்சில்ல..


ஓ...சரின்னே...என்னதான் பண்ணலாம்னு இருக்கீங்க!


அந்த நிர்வாகத்துக்கு சொல்லி இருக்கேன்...அவங்க நடவடிக்கை எடுப்பாங்கன்னு நம்புறேன்..வரும் பாரேன்!


வரும் ஆனா வராது...அப்படியான்னே!


டேய் நாயே நீ தான் அதுல இல்லயே அப்புறம் எதுக்கு உனக்கு இந்த காண்டு...


ஆமான்னே...நீங்க கூட பெரும பீத்தக்கரையாட்டும் நான் விலகுறேன்...நான் மானமுல்லவன்...மத்தியானத்துல கக்கா போகதவன்னு சீன் போட்டு புட்டு இப்போ போய்...எனக்கு மானம்லாம் இல்ல...மன்றாடி கேட்டுக்கறேன்..என்னய சேத்துக்கங்கன்னு பிச்ச எடுக்காத குறையா சேந்திருக்கீங்களே...


யோவ் ஆமாய்யா சேந்து இருக்கேன்...அதுக்கு என்னான்ற!


என்னன்னே...நீங்க எவ்ளோ பெரிய ஆளு..பெரிய பெரிய பத்திரிக்கை எல்லாம் உங்களோட உணமையான உணர்வுள்ள பதிவுகளை பற்றி பெருமையா பேசி இருக்கு...நீங்க போயி...!


ஆமாய்யா...அதுல இருந்தாதான்யா பல பேரு வருவான்...அப்படியே வருமானமும் வரும்!


ஏன்னே இந்த மானங்கெட்ட பொழப்பு...அப்புறம் எதுக்கு அங்க சீன் போட்டு வந்தீங்க...


இப்போ இன்னாங்கற...இப்போ சேந்துட்டேன்..எனக்கு மானம் இல்லன்னு வச்சிக்க..இப்போ என்ன பன்னனும்கற!


இல்லன்னே..எப்படி ஆயிரம் பேருக்கு தெரியிறாப்ல உதார் விட்டுட்டு விலகல் நோட்டீஸ் அடிச்சீங்களோ...அதே போல இப்போ நான் போயி சேந்துட்டேன்...என் அன்பான வாசகர்களே...இப்போ கட்சிக்கு எதிரா பேசி கொடுத்த அறிக்கைய வாபஸ் வாங்கிட்டேன்னு வெளிப்படையா போட்ற வேண்டியது தானே..


அதெல்லாம் தானா தெரிஞ்சிப்பாங்க...ஹெஹெ!




இனி நீங்கள்லாம் நாட்ல அந்த பிரச்சினை...அரசியல்வாதி அப்படின்னு பதிவு போடாதீங்கன்னே..உங்க மரியாதைய காப்பாத்திக்கவே உங்களுக்கு முடியல இதுல ஊருக்கு அட்வைஸ்...கொய்யால!


யோவ் நீ என்ன சொன்னாலும்..இந்த பதிவுலகத்துல இருக்கனும்னா...அதுவும் பலருக்கு நான் தெரிஞ்சிகிட்டே இருக்கனும்னா..சூடு சொறனை எல்லாம் பாக்க கூடாதுய்யா!...


இப்படி இருந்த ஒருத்தர ஏற்கனவே காதுமேல அடிச்சி இப்பதான் விலக்கி இருக்காங்க...பாப்போம் உங்க கதை எத்தனை நாளைக்குன்னு...இதுல உங்களையும் நம்பி பின்னாடி வர்றவங்க தான் பாவம்...எவ்ளோ நல்லவங்க அவங்கன்னும் தெரியிது!


கொசுறு: நாங்கள்லாம் யாரு தெரியும்ல...நேர்மை. கருமை, எருமைங்கற மூன்றெழுத்துல தான் எங்க உசிரே அடங்கி இருக்குன்னு சொல்லும் தர்மவான்களுக்காக எழுதப்பட்டது...!

17 comments:

மனசாட்சி™ said...

ஜலபுல ஜன்ஸ்.... அப்படின்னா என்ன மாம்ஸ்.

சென்னை பித்தன் said...

யாரு திரட்டியில்சேர்ந்து இருக்காங்க,யாரை விலக்கியிருக்காங்க இதெல்லாம் எதுவுமே எனக்குத் தெரியாது.கொஞ்சம் புரியும்படி எனக்கு ரகசியமாச் சொல்லுங்களேன்!

காட்டான் said...

ஒன்னுமே புரியல மாப்ள..;-)

வீடு சுரேஸ்குமார் said...

சரிதான்........! அரசியல்வாதிகளை இனி குறை சொல்லமுடியாது! எதையும் தெளிவா சிந்திக்கனும்.
ஒரு வேளை யாருக்காக விலகினாரோ அவங்க யாரும் இவரை கண்டுக்கலையோ?
இதை நான் அப்பொழுதே சிந்தித்தேன்......அதனால விலகல...!

வைகை said...

யோவ் தக்காளி, இந்த ஓட்டு ஹிட்ஸ் எல்லாம் வாங்கி எங்க சொருகிக்கனும்னு சொன்னீன்னா நானும் சொருகிக்க வசதியா இருக்கும்! ஏன்னா என்கிட்டயும் ஒரு ப்ளாக் இருக்குயா :-)

வரலாற்று சுவடுகள் said...

யாரைப்போட்டு இந்த கும்மு கும்முறீங்கன்னு தெரியலையே ..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தக்காளி ஆரம்பிச்சிட்டாப்ல....... சரி விடுங்கண்ணே. நம்ம பயதான்.......!

FOOD NELLAI said...

//சென்னை பித்தன் said...
யாரு திரட்டியில்சேர்ந்து இருக்காங்க,யாரை விலக்கியிருக்காங்க இதெல்லாம் எதுவுமே எனக்குத் தெரியாது.கொஞ்சம் புரியும்படி எனக்கு ரகசியமாச் சொல்லுங்களேன்!//
அண்ணே, சென்னை வந்திருக்கேன். நேர்ல சொல்றேன்.:))

FOOD NELLAI said...

//வீடு சுரேஸ்குமார் said...
சரிதான்........! அரசியல்வாதிகளை இனி குறை சொல்லமுடியாது! எதையும் தெளிவா சிந்திக்கனும்.
ஒரு வேளை யாருக்காக விலகினாரோ அவங்க யாரும் இவரை கண்டுக்கலையோ?
இதை நான் அப்பொழுதே சிந்தித்தேன்......அதனால விலகல...!//
நாம எப்பவுமே, முன் ஜாக்கிரதை முத்தண்ணால்லா. :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வீடு சுரேஸ்குமார் said...
சரிதான்........! அரசியல்வாதிகளை இனி குறை சொல்லமுடியாது! எதையும் தெளிவா சிந்திக்கனும்.
ஒரு வேளை யாருக்காக விலகினாரோ அவங்க யாரும் இவரை கண்டுக்கலையோ?
இதை நான் அப்பொழுதே சிந்தித்தேன்......அதனால விலகல...!///////////

வாழ்க ஜனநாயகம்..............

அம்பலத்தார் said...

ஹி ஹி
எது நடந்ததுவோ
அது நன்றாக நடந்தது.
எது நடக்கிறதோ
அதுவும் நன்றாகவே நடக்கிறது.
எது நடக்குமோ
அதுவும் நன்றாகவே நடக்கும்.
இதையெல்லாம் நான் சொல்லலைப்பா விக்கி.
கீதை சொல்லுது.

வெளங்காதவன்™ said...

அஹம் பிரமாஷ்மி!

ரமேஷ் வெங்கடபதி said...

குற்றாலத்தில் அருவியில் குளிக்கும்போது, காதில் அடிக்கடி விழும் வார்த்தைத் தொடர் அது..அர்த்தம் புரியவில்லை இதுவரை! விக்கியார் விளக்குவாரா!?...ஜல புலா..!

திண்டுக்கல் தனபாலன் said...

போட்டு தாக்குறது யாரை என்று தான் தெரியலே !

MANO நாஞ்சில் மனோ said...

என்னலேய் ஒரே பிரகாசமாய் இருக்கு பதிவுகளும் கமெண்டுகளும்.......அண்ணே டேய் அண்ணே நீ எங்கேயோ போயிட்டேடா அண்ணே....!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா இந்த மேட்டரை ரகசியமா ஆபீசர் சென்னை வரைக்கும் பரப்புறாரே டாரடிக்குது ஆபீசர்.

mulet said...

http://www.facebookthemes.info
Thanks for a marvelous posting! I quite enjoyed reading it, you’re a great author.I will make sure to bookmark your blog and may come back very soon. I want to encourage continue your great writing, have a nice day!